எஸ்பிளனேட் - கரையோரரக் கலை அரங்குகள்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

எஸ்பிளனேட் - கரையோரரக் கலை அரங்குகள் சிங்கப்பூர் நிகழ்கலைகளின் தேசிய மையம். அங்குத் தமிழ்க் கலைகளுக்கும் இடமுண்டு. தமிழ் இசை, நடனம், நாடகம் முதலியவற்றை அந்த முன்னணிக் கலை அரங்கம் தொடர்ந்து நடத்துகிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நிகழ்ச்சிகள் படைக்கப்படுகின்றன.

அனைவருக்குமான கலை மையமாக 2002-இல் உருவெடுத்த எஸ்பிளனேட், கலைத்துய்ப்பை நோக்கி மக்களை ஈர்க்கவும் கலையின்மூலம் மகிழ்விப்பதுடன் கற்பிக்கவும்வேண்டும் என்னும் சமூக நோக்கத்துடன் செயல்படுகிறது. மூத்தோர், இளையர், குழந்தைகள், சமூகத்தில் பின்தங்கியோர் என எல்லாத் தரப்பினரின் வாழ்க்கையையும் வளமாக்குவது அதன் நோக்கம்.

எஸ்பிளனேடில் ஆண்டுதோறும் பல பண்பாடுகள், மொழிகள், கலை வடிவங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் சுமார் 3,500 நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை மக்கள் இலவசமாகக் கண்டு ரசிக்கலாம்.

சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளித் திருநாள் காலங்களில் முறையே ஹுவாயி - சீனக் கலை விழா, பெஸ்டா ராயா - மலாய்க் கலை விழா, கலா உற்சவம் - இந்தியக் கலை விழா ஆகியன ஏற்பாடு செய்யப்படுகின்றன. சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டைக் கொண்டாடவும் விழாக் காலங்களில் சமூகத்தினர் கலைகளில் ஈடுபடவும் அவை ஊக்குவிக்கின்றன.

‘கலா உற்சவம்’ எனப்படும் 10-நாள் கதம்ப விழாவில் சிங்கப்பூர்க் கலைஞர்களும் பன்னாட்டுக் கலைஞர்களும் பங்குபெறும் இந்திய நடனம், இசை, நாடகங்கள் ஆகியவை இடம்பெறும். ஒவ்வொரு முறையும் சுமார் 40 படைப்புருவாக்கங்கள் வழியாகச் சுமார் 80 நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். ‘ராகா’ என்னும் நிகழ்ச்சித்தொடரிலும் எஸ்பிளனேட் இந்தியக் கலை நிகழ்ச்சிகளைப் படைக்கின்றது. சிங்கப்பூர்க் கலைஞர்களின் புதிய படைப்புகளும், கூட்டுப் படைப்புகளும் அவற்றில் இடம்பெறுகின்றன. ஆண்டுதோறும், சுமார் 20 படைப்புகளையும் 30 நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது ராகா. கலா உற்சவம், ராகா ஆகியவற்றை மூன்று பேரைக்கொண்ட தயாரிப்புக் குழு உருவாக்குகின்றது.

மிரர் தியேட்டரும் ரவீந்திரன் நாடகக் குழுவும் இணைந்து படைத்த ‘தொண்டன்’ (கலா உற்சவம் 2007), வானொலி நாடகத் தொடராக வெளிவந்து முத்திரை பதித்த பி. கிருஷ்ணனின் ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’யை அடிப்படையாகக்கொண்டு அதேபெயரில்  ரவீந்திரன் நாடகக் குழு மூன்று பகுதிகளாகத் தயாரித்த மேடைத்தொடர் (கலா உற்சவம் 2015, ராகா 2016, ராகா 2018) முதலியன எஸ்பிளனேடின் தமிழ் நாடகப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. அகம் நாடகக் கூடம் எஸ்பிளனேடுடன் இணைந்து தயாரித்து, 2023-ஆம் ஆண்டு கலா உற்சவ நாடக விழாவில் அரங்கேற்றிய ‘பச்சை பங்களாவில் இரட்டைக் கொலை’ நாடகம் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் லைஃப் நடத்திய நாடகவிழாவில் ஆகச்சிறந்த ஆன்ஸாம்பிள் விருதை 2024-இல் பெற்றது.



மேல்விவரங்களுக்கு
Esplanade. Accessed 1 August 2025. https://www.esplanade.com/ 
Cheong, Colin. Esplanade: Theatres On the Bay. Singapore: Straits Times Press, 2013. (Call no.: RSING 792.095957 CHE )

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA