சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூரின் அரசாங்க, அரசாங்க உதவி பெறும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும் தமிழாசிரியர்களைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் (சி.த.ஆ.ச.) 1951-இல் பதிவுபெற்றது. சங்கத்தின் முதல் தலைவர் எம். ஜேசுதாசன். தமிழாசிரியர்களின் வேலைப் பாதுகாப்பு, நலன், பணித்திறன் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் இச்சங்கம் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகியவற்றின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. சுமார் 50 ஆசிரியரோடு தொடங்கிய சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 2020-களுக்குள் 550-க்கு மேல் பெருகியது. இச்சங்கம் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசில் இணைந்த முதல் ஆசிரியர் சங்கம் ஆகும். மேலும், ஆசியான் ஆசிரியர் சங்கங்களின் பேரவையிலும் உலக ஆசிரியர் அமைப்பிலும் சி.த.ஆ.ச. உறுப்பியம் பெற்றுள்ளது. 

ஒரு காலத்தில் தமிழாசிரியர்கள் ஜொகூர்பாருவில் (மலேசியா)ஆசிரியர் பயிற்சிபெற வேண்டியதிருந்த நிலையை மாற்றி அவர்கள் சிங்கப்பூரிலேயே பயிற்சிபெற வழிசெய்தது, ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தைத் தமிழாசிரியர்களுக்குப் பெற்றுத்தந்தது, தமிழாசிரியர் சங்கத்திற்குச் சொந்தப்  பணிமனை வாங்கியது போன்றவை சங்கத்தின்  முக்கியச் சாதனைகள். மேலும், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திலும் தேசியக் கல்விக் கழகத்திலும் தமிழில் பட்டக்கல்வி தொடங்கியதிலும் சங்கத்திற்கு முக்கியப் பங்குண்டு. முதலாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை 1992-இல் சிங்கப்பூரில் நடத்தியதோடு ‘உலகத் தமிழாசிரியர் பேரவை’ என்னும் அமைப்புக்கு அடித்தளமிட்டு அதன் தலைமையகத்தைச் சிங்கப்பூரில் நிறுவவும் இச்சங்கம் வழிகோலியது வரலாற்றுச் சிறப்புக்குரியது.

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு சுட்டிமயில் என்னும் மாணவர் இதழையும் தமிழ்க்கல்வி பற்றிய கலந்துரையாடல்களுக்கு ஒரு தளமாகத் தமிழாசிரியர் குரல் என்னும் சஞ்சிகையையும் சங்கம் வெளியிடுகிறது. சுதந்திரச் சிங்கப்பூரின் 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் சங்கம் வெளியிட்டது. சங்கம் 2002 முதல் கல்வி அமைச்சின் ஆதரவுடன் தமிழ் முரசு நாளிதழுடன் இணைந்து தமிழாசிரியர்களுக்கு “நல்லாசிரியர் விருது”களை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. மேலும், 2012-ஆம் ஆண்டு முதல், தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றும் பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு “வாழ்நாள் நல்லாசிரியர் விருது” என்னும் விருதையும் சங்கம் வழங்கி வருகிறது. 



மேல் விவரங்களுக்கு
Singapore Tamil Teachers' Union. Accessed 1 August 2025. https://www.sttu.org.sg

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA