நாராயண பிள்ளை



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூர் ஒரு காலனியாக 1819இல் நிறுவப்பட்டபோது வந்த தமிழர்களில் நாராயண பிள்ளையும் ஒருவர். சிங்கப்பூரில் அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் நன்கு அறியப்பட்ட தொழிலதிபராகவும் சமூகத் தலைவராகவும் விளங்கினார். மேலும் சிங்கப்பூரின் முதல் குடியேறிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

நாராயண பிள்ளை பினாங்கில் செங்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.  ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் தமது இரண்டாவது பயணமாகச் சிங்கப்பூருக்கு தி இந்தியானா கப்பலில் பயணித்தபோது அவரும் உடன் வந்தார். சிங்கப்பூரின் முதல் செங்கல் நிறுவனத்தை இன்று தஞ்சோங் பகார் என்றழைக்கப்படும் அன்றைய மவுண்ட் எர்ஸ்கைன் என்னும் இடத்தில் நிறுவினார். பல்வேறு வகையான பருத்தி ஆடைகளுக்குப் பெயர் பெற்ற கிராஸ் ஸ்ட்ரீட்டில் ஜவுளிக்கடை ஒன்றையும் அவர் திறந்தார். அக்கடை, 1822இல் நெருப்பில் அழிந்தது. இத்தகைய பின்னடைவுகள் இருந்தபோதிலும், ராஃபிள்ஸின் ஆதரவுடன், இன்று ராஃபிள்ஸ் பிளேஸ் என்றழைக்கப்படும் அன்றைய வணிகச் சதுக்கத்திற்கு இடம் பெயர்ந்து தமது தொழிலைப் புதிதாகத் தொடங்கினார். இந்திய சமூகத்தில் அவரது செல்வாக்கு வளர்ந்தபோது அவர் இந்திய சமூகத்தின் தலைவராகவும் ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார்.

சிங்கப்பூரின் முதல் இந்து ஆலயமான ஸ்ரீ மாரியம்மன் கோயில் 1827இல் கட்டி முடிக்கப்பட்டதில் நாராயண பிள்ளை முக்கியப் பங்கு வகித்தார். இக்கோயில், வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், இந்தியக் குடியேறிகள் தாங்கள் தங்குவதற்கான இடத்தைக் கண்டுபிடித்து வேலை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அவர்களுக்கு அடைக்கலமாகவும் இருந்தது. அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வண்ணம்,  1957இல், சிராங்கூனில் ஒரு சாலைக்கு பிள்ளை ரோடு என்று பெயரிடப்பட்டது. மேலும் 2019இல், சிங்கப்பூர் ஆற்றங்கரையில், நாட்டின் இருநூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவரை நினைவுகூரும் வகையில் ஒரு சிலை நிறுவப்பட்டது. ஆனால், நாராயண பிள்ளை எப்படி இருந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு யூகத்தின் அடிப்படையிலமைந்த உருவமாகவே கருதப்படுகிறது.



For more information
“Naraina Pillai: The First Recorded Tamil in Singapore.” Roots. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/en/stories-landing/stories/naraina-pillai/story
“Paying Tribute to Singapore’s Many Contributors: New Statues of Historical Figures Installed Along the Singapore River.” SG Bicentennial, 4 January 2019. https://www.sg/Assets/Bicentennial/Images/wp-content/uploads/2019/03/Press-Release-Paying-tribute-to-many-contributors-4-Jan.pdf 
Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore. Edited by Arun Mahizhnan and Nalina Gopal. Singapore: Indian Heritage Centre and Institute of Policy Studies, Lee Kuan Yew School of Public Policy, National University of Singapore, 2019

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.

 



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA