நகரத்தார் என்று அறியப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், தம் சமூகத்திற்குச் சேவையாற்ற சிங்கப்பூர் நகரத்தார் சங்கம் என்னும் அமைப்பை 1980-இல் நிறுவினர். சங்கம் 30 மே 2002 அன்று பதிவுசெய்யப்பட்டது. முதல் தலைவராக வி. தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் நோக்கம், "உறுப்பினர்களிடம், குறிப்பாக இளைய நகரத்தார்களிடம் தொண்டு மனப்பான்மையை வளர்ப்பதுதான்". திருவிழாக் காலங்களிலும், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களை வழிப்படுத்துதல், கூட்ட நெரிசலைச் சமாளித்து இலகுவாக அனைவரையும் பங்குபெறச் செய்தல், உணவு தயாரித்தல், உணவு பரிமாறுதல் எனப் பல அலுவல்களையும் தொண்டாகச் செய்கிறார்கள்.
ஆண்டுதோறும் குறைந்தது மாதத்திற்கு ஒன்று என நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. சமூகப் பார்வையுடன் கல்வி உதவித் தொகை, விருதுகள் வழங்குதல் முதலிய நிகழ்ச்சிகள் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் மேலாண்மைக் குழுவுடன் இணைந்து நடத்தப்படுகின்றன. தங்களது பண்பாட்டில் மிக முக்கிய அங்கமான 'இழை எடுத்தல்' எனும் சடங்கை, பிள்ளையார் நோன்பு அன்று மிகப்பெரிய அளவில் நகரத்தார் சங்கம் நடத்துகிறது. இதன்மூலம் பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
சிங்கை நகரத்தார் மலர் என்னும் சஞ்சிகையைச் சங்கம் வெளியிடுகிறது. சங்கம், ஆலயம் தொடர்பான தகவல்கள் இந்தக் காலாண்டு இதழில் இடம்பெறுகின்றன.
மிகக் குறைந்த உறுப்பினர்களோடு ஆரம்பிக்கப்பட்ட சங்கத்தில், 2020 கணக்கெடுப்பின்படி, 900க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழுவில், சேவை அடிப்படையில் பணியாற்றுவதால், தலைவரும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படும் வழக்கம் தொடர்கிறது.
மேல்விவரங்களுக்கு
Singai Nagarathar Sangam. Accessed 1 August 2025. https://singainagarathar.com
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |