தேசியக் கலை மன்றம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

தேசியக் கலை மன்றம், சிங்கப்பூரில் தமிழ்க் கலைகளின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்கும் அரசு நிறுவனம். கலாசார, சமூக, இளையர் அமைச்சின்கீழ் 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மன்றம், சமுதாயத்திற்கு எழுச்சியூட்டும், படைப்பாற்றலைத் தூண்டும், சிங்கப்பூரை உலகளவில் இணைக்கும் ஒரு கலைத் துறையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

சிங்கப்பூர்க் கலைத்துறை தலைசிறந்து விளங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன், கலைஞர்களுக்கும் கலை சார்ந்த அமைப்புகளுக்கும் பலதரப்பட்ட வாய்ப்புகளை வழங்குகிறது மன்றம். கலை ஆக்கம், படைப்பு, பயிற்சி, ஆராய்ச்சி, நிறுவன மேம்பாடு, ரசிகர்களை உருவாக்குதல் முதலியவற்றை உள்ளடக்கிய விரிவான மானியங்கள்மூலம், நீடித்து நிலைக்கவல்ல கலைத்துறை நிதியளிப்புக் கட்டமைப்பை மன்றம் நிறுவியுள்ளது.

இலக்கியம், நாடகம், இசை, நடனம் ஆகிய துறைகளில் தமிழ்க் கலைச் செயற்பாடுகள் துடிப்புடன் இருக்க மன்றம் முக்கியப் பங்காற்றுகிறது. வளரும் கலைஞர்களின் வளர்ச்சிக்கு உதவும் அதேவேளையில், நீண்ட காலம் செயல்பட்டுவரும் தமிழ்க் கலை அமைப்புகளுக்கு ஆதரவளித்து, சிங்கப்பூரில் தமிழ்க் கலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் மன்றம் உறுதி செய்கிறது.

மேலும், மன்றம் தமிழ்க் கலைகளைத் தேசியத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கிறது. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா தொடர்ந்து தரமான தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு, தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளையும் முன்வைக்கிறது. தேசியக் கலை மன்றம்-நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத் திட்டம் போன்ற முன்னெடுப்புகளில், உள்ளூர் இலக்கியவாதிகளுக்குப் புகழ்பெற்ற வெளிநாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்தியுள்ளனர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள், மன்றம் ஏற்பாடு செய்யும் பன்னாட்டு உறைவிடப் பயிற்சி வாய்ப்புகள் வழியாகவும் பயனடைகிறார்கள்.

பள்ளி சார்ந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே கலந்துறவாடல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, தெருக் கூத்து, நடனம், இசை, கதைசொல்லல் முதலிய பல்வேறு தமிழ்க் கலை வடிவங்கள்மூலம் சிங்கப்பூரின் கலாசார அடையாளத்தைப் பேண வழிசெய்கின்றன.

பல்லினப் பண்பாட்டுப் படைப்புகளில் இந்திய நிகழ்ச்சிகளை இணைப்பதன்மூலம் மன்றம் பண்பாடுகளுக்கிடையிலான புரிதலை வளர்க்கிறது. சிங்கப்பூரில் பார்வையாளர்களை உருவாக்குவதோடு, சிங்கப்பூர்க் கலையையும் கலாசாரத்தையும் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்வதிலும் மன்றம் கவனம் செலுத்துகிறது. அந்த நோக்கில், சென்னைப் புத்தகக் காட்சி, பிராங்க்ஃபர்ட் புத்தகக் காட்சி போன்ற பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளில் பங்கேற்றல், வெளிநாட்டு உறைவிடப் பயிற்சி வாய்ப்புகளுக்கு ஆதரவளித்தல், பன்னாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றல் ஆகியவற்றின்மூலமும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம், நாடகம், இசை, நடனம் ஆகியவற்றை உலகெங்கும் கொண்டுசெல்ல மன்றம் ஆதரவளிக்கிறது.



மேல்விவரங்களுக்கு
National Arts Council. Accessed 1 August 2025. https://www.nac.gov.sg/
Our SG Arts Plan (2018–2022). National Arts Council. Accessed 1 August 2025. https://www.nac.gov.sg/resources/arts-masterplans/our-sg-arts-plan-2018-2022

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA